இந்தியா
ஆற்றில் கவிழ்ந்த பேருந்து: ஒரு வயது குழந்தை உட்பட மூவர் பலி
மெல்கோத்ரா ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிராஜ்பூரில், பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குஜராத்- சோட்டா உதய்ப்பூரில் இருந்து அலிராஜ்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தின் சாரதி திடீரென மயங்கியுள்ளார்.
இதனால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login