தமிழகத்தில் கனமழை காரணமாக நாளை பாடசாலைகளுக்கும் ,கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பெரம்பலூர், அரியலூர், மதுரை மாவட்டங்களில் நாளை மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 11-ஆம் தேதி வட தமிழக கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதிபாடசாலைகள், கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
சென்னை உள்பட 9 மாவட்டங்களில் நவம்பர் 10, 11 ஆகிய இரு நாள்களுக்கு பாடசாலைகள் , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரம்பலூர், அரியலூர், மதுரை மாவட்டங்களில் நாளை மட்டும் பாடசாலைகள் , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் நாளை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment