Maradona
செய்திகள்இந்தியா

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கால்பந்து ஜாம்பவானின் கடிகாரம்!

Share

இந்தியாவில், கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவின் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து ஜாம்பவான் ஆன மாரடோனா, பல விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அணிவதில் விருப்பம் கொண்டவர் .

அத்தோடு மாரடோனா பிங் பாங் குரோனோகிராப் என்ற லிமிடெட் எடிஷன் கைக்கடிகாரத்தையும் வைத்திருந்தார்.

அவரின் ஓய்வுபெற்ற பிறகு, கடந்த 2010 உதைபந்தாட்ட உலகக் கோப்பையில் கூட அவர் இந்த கைக்கடிகாரத்தை அணிந்திருந்தார்.

மாரடோனா மறைவுக்கு பிறகு, துபாயில் இக்கடிகாரம் மிகவும் பாதுக்காப்பாக காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.

இதன் பெறுமதி சுமார் 20 இலட்சம் இந்திய ரூபாகள்.

இந்நிலையில் இக் கைக்கடிகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென திருட்டுப்போனது.

துபாய் காவல்துறையினர் பல கோணங்களில் தேடியும் அது சம்மந்தமாக எந்த தகவலையும் அவர்களால் அறிய முடியவில்லை.

இந்நிலைலையில் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இருந்து இக்கடிகாரத்தை மீட்கப்பட்டதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் தெரிவித்த அசாம் காவல்துறை அதிகாரி ,

துபாயிலிருந்து சமீபத்தில் இந்தியா திரும்பிய நபரின் வீட்டிலிருந்து இந்த கைக்கடிகாரம் மீட்கப்பட்டதாகவும் துபாய் காவல்துறையுடன் இணைந்து அசாம் காவல்துறை செயல்பட்டதாகவும், இது தொடர்பாக வாஜித் ஹுசைன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர்,

துபாயில் மாரடோனாவின் உடைமைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவனத்தில் வாஜித் ஹுசையன் காவலாளியாக பணியாற்றி வந்தார் எனவும்,

அங்கிருந்து மாரடோனாவின் கைக்கடிகாரத்தை திருடிய வாஜித் ஹுசையன், கடந்த ஆகஸ்ட் மாதம், தனது தந்தைக்கு உடல்நிலை சுகயீனம் என கூறி இந்தியா திரும்பியுள்ளார் எனவும்,

இந்தியா வந்த பிறகு, அவர் மீண்டும் துபாய் செல்லவில்லை எனவும்,

இது தொடர்பாக அந்த தனியார் நிறுவனம் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவர் சரியாகப் பதிலளிக்கவில்லை எனவும்,

இன்று அதிகாலை 4 மணியளவில் சிப்சாகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து வாஜித் ஹுசைனை கைது செய்ததாகவும், அவரிடமிருந்து அக் கடிகாரமும் மீட்கப்பட்டது” எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்தோடு கைது செய்யப்பட்டவரை விளக்கமறியலில் வைத்திருப்பதாக அசாம் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...