நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாகப் பல மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகத்தை இரு நாட்களுக்குள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (National Water Supply and Drainage Board – NWSDB) தெரிவித்துள்ளது.
கனமழை மற்றும் வெள்ளத்தால் நீரேற்று நிலையங்கள் (Pumping Stations), குழாய்கள் மற்றும் நீர்ச் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இந்தப் பாதிப்புகளைச் சீரமைத்து, மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் விநியோகத்தைச் சாதாரண நிலைக்குக் கொண்டு வர சபையினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர்ப் பயன்பாட்டில் விழிப்புடன் இருக்குமாறும், சுத்திகரிக்கப்பட்ட நீரையே அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

