PTI11 10 2025 000418B
உலகம்செய்திகள்

புதுடெல்லி செங்கோட்டை அருகே சிற்றூந்து வெடிப்பு: தீவிரவாதத் தாக்குதலாகச் சந்தேகம் – 9 முதல் 13 பேர் பலி – நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!

Share

இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை (Red Fort) அருகே நேற்றிரவு இடம்பெற்ற சிற்றூந்து வெடிப்புச் சம்பவம் தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் பஹல்காமில் (Pahalgam) நடந்த தாக்குதலுக்கு எதிரான, இந்திய இராணுவத்தின் ‘ஒப்பரேஷன் சிந்தூர்’ (Operation Sindhur) நடவடிக்கையை எதிர்க்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் பலியானோர் குறித்த தகவல்கள் வேறுபடுகின்றன; குறைந்தது 9 பேர் பலியானதாக இந்தியாவின் சில ஊடகங்களும், 13 பேர் இறந்ததாகத் தமிழகத்தை மையப்படுத்திய ஊடகங்களும் குறிப்பிட்டுள்ளன.

டெல்லியில் சிற்றூந்து குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா, ஒடிசா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அங்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையிலேயே டெல்லியில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்மையில், காஷ்மீர் – பரிதாபத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...