New Project 6
செய்திகள்இலங்கை

பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்படலாம்?

Share
அடுத்த இரு வாரங்களில் கொவிட் -19 தொற்று நோயின் அடிப்படையில் பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்படலாம் என சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அனைத்து சுகாதார வழிகாட்டல்களையும் கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது கொவிட் வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் என்றும், நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 4,000 – 5,000 இருந்த நிலையில், அது தற்போது 1,000 ஆக குறைந்துள்ளதுடன், நாளாந்த இறப்பு எண்ணிக்கையும் 50-60 ஆக குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்படின் தற்போதுள்ள வழிகாட்டல்கள் மேலும் கடுமையாக்கப்படலாம். அல்லது மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தற்போது தடுப்பூசித் திட்டமானது அமுலில் உள்ள நிலையில், வர்த்தக நாமத்தை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுத்தியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 11
இலங்கைசெய்திகள்

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

வெள்ளவத்தையில் நினைவேந்தலை அடுத்த வருடமும் அனுஸ்டிக்க விடாதீர்கள். அவ்வாறு நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம்...

23 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென கூறி குழப்பம் விளைவித்த நபர் கைது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க வேண்டுமெனக் கூறி குழப்பம் விளைவித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது...

24 13
இலங்கைசெய்திகள்

சுவிஸ் பெண் உட்பட 2 வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில்...

22 14
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய வசதி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும்...