இந்தியா

குஷ்புவை முதலில் சமூக வலைதளத்தை பார்க்க சொல்லுங்கள்.., பதிலடி கொடுத்த கனிமொழி

Published

on

குஷ்புவை முதலில் சமூக வலைதளத்தை பார்க்க சொல்லுங்கள்.., பதிலடி கொடுத்த கனிமொழி

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை குறித்து கனிமொழி கருத்து தெரிவிக்கவில்லை என்று குஷ்பு பேசிய நிலையில் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கா் என்ற அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த வாரம் இரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அவர், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை மீட்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு, “கூட்டணி என்பதால் கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை குறித்து கனிமொழி, பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் வாய் திறக்காமல் இருக்கின்றனர்.

எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் பிரியங்கா, கனிமொழி எங்கே சென்றார்கள்?” என்று ஆவேசமாக பேசினார்.

இந்நிலையில் குஷ்புவின் கேள்விக்கு திமுக எம்பி கனிமொழி பதில் அளிக்கையில், “கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு கண்டனம் தெரிவித்துவிட்டோம்.

இந்த விவகாரத்திற்கு நான் கருத்து கூறவில்லை என பாஜகவை சேர்ந்த குஷ்பு கூறியுள்ளார். அவரை முதலில் சமூக வலைதளத்தை பார்க்க சொல்லுங்கள், நான் கருத்து கூறி உள்ளேன்” என்றார்.

Exit mobile version