இந்தியா

பெண்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் வாக்களிப்பார்களா? நடிகை குஷ்பு

Published

on

பெண்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் வாக்களிப்பார்களா? நடிகை குஷ்பு

பெண்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா என்று நடிகை குஷ்பு சர்ச்சையாக பேசியுள்ளார்.

சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் நடிகையும், தேசிய மகளிர் உறுப்பினருமான நடிகை குஷ்பு கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, “பெண்களுக்கு ரூ.1000 ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா? தமிழ்நாட்டில் 3500 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் திமுகவின் ஆள் தானே? அதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்ல போகிறார்.

இந்த விவகாரத்திற்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. தாய்மார்களின் பிரச்சனையை தீர்த்து வைக்கவில்லை” என்றார்.

முன்னதாக பேசிய அவர், “மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு மாநிலங்களவையில் ஒரு சீட் கொடுத்துள்ளனர். திமுகவில் பிரச்சாரம் செய்ய யாரும் இல்லை. அதனால், கமல் ஹாசன் போன்ற முகம் திமுகவுக்கு பிரச்சாரம் செய்ய தேவை” என்றார்.

Exit mobile version