இந்தியா

இந்தியாவில் டாடா குழுமம் எடுத்துள்ள முயற்சி

Published

on

இந்தியாவில் டாடா குழுமம் எடுத்துள்ள முயற்சி

இன்னும் இரண்டரை ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான, ஆப்பிள் ஐபோன்களை டாடா குழுமம் இந்தியாவில் தயாரிக்கவுள்ளதாக இந்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி, உலகளாவிய மின்னணு உற்பத்திகளுக்கு ஆதரவளிக்கும் அதேநேரம் இந்தியாவை உலகளாவிய மின்னணு சக்தியாக மாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பமுடியாத அற்புதமான சந்தை
இதன்படி ஆப்பளின் ஒப்பந்த தயாரிப்பாளரான தைவானின் விஸ்ட்ரான் கோர்ப்பரேஷன், அதன் இந்திய பிரிவை டாடா குழுமத்திற்கு 125 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டு மே மாதம், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், இந்தியா ஒரு ‘நம்பமுடியாத அற்புதமான சந்தை’ என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version