சினிமா

பான் இந்திய இயக்குனராக மாறியுள்ள ஜேசன் சஞ்சய்!..எகிறும் எதிர்பார்ப்பு

Published

on

பான் இந்திய இயக்குனராக மாறியுள்ள ஜேசன் சஞ்சய்!..எகிறும் எதிர்பார்ப்பு

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த நிலையில், ஒரு குறும்படத்தை ஒன்றை இயக்கி இருந்தார்.

சமீபத்தில் இவருடைய முதல் படத்தை லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த படத்தில் இளம் நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படம் பான் இந்தியா ஜானரில் ரிலீஸாகும் என்றும், இப்படம் 10 மொழிகளில் உருவாகிறதாம்.

மேலும் இதுபற்றிய அப்டேட்டையும் மினி டீசர் வடிவில் விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்று தெரியவில்லை.

உண்மையாக இருக்கும் பட்சத்தில், இதுவரை விஜய் கூட 10 மொழி படங்களில் நடிக்கவில்லை. ஆனால் அவரது மகன் முதல் படத்திலேயே பான் இந்திய இயக்குனராக மாறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version