உலகம்

மேலிடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பரபரப்பான அறிக்கை

Published

on

மேலிடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பரபரப்பான அறிக்கை

அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக மேலிடத்திற்கு அறிக்கை சமர்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜகவுடன் கூட்டணி இல்லை எனவும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் இருந்தும் விலகுவதாகவும் அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த கூட்டணி முறிவுக்கு, அதிமுக தலைவர்களை பற்றி அண்ணாமலை தவறாக பேசியது தான் காரணம் என பரவலாக கூறப்படுகிறது.

இதனிடையே, அதிமுகவில் மீண்டும் பாஜகவை இணைப்பதற்கான வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், கூட்டணி முறிவு குறித்து பாஜக மேலிடத்தில் நிர்மலா சீதாராமன் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த அறிக்கையானது, அதிமுகவுடன் பாஜக இணைந்திருந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்றும், பிரிந்து சென்றால் பாஜகவால் வெற்றி பெற முடியுமா என்றும், மாவட்ட பாஜக தலைவர்களிடம் பெற்ற தகவல்களை வைத்து தயார் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version