இந்தியா

சனாதனம் குறித்து பேசிய உதயநிதியின் துணிச்சலை பாராட்டுகிறேன்:  சத்யராஜ்

Published

on

சனாதனம் விவகாரத்தில் தமிழக அமைச்சர் உதயநிதியின் துணிச்சலை பாராட்டுகிறேன் என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை நாம் எதிர்க்க கூடாது. அதன் நாம் ஒழித்துக் கட்ட வேண்டும். அதை போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி” என்றார்.

இவரின் பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி வந்தன. ஆனாலும், உதயநிதி, தான் பேசியது சரி என்றும், வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் என்றும் கூறியிருந்தார்.

உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு! சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என மோடி கருத்து
உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு! சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என மோடி கருத்து
அதுமட்டுமல்லாமல், உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிபதிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் உள்பட 262 பிரபலங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர்.

இந்நிலையில், நடிகர் சத்யராஜ் தாயார் மறைவிற்கு ஆறுதல் கூறுவதற்காக அவரது இல்லத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், சேகர்பாபு உள்ளிட்டோர் சென்றனர்.

இதைத் தொடர்ந்து நடிகர் சத்யராஜ் செய்தியாளர்களை சந்தித்த போது, “சனாதனம் விவகாரத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி தெளிவாக பேசியுள்ளார். அவரது துணிச்சலை பாராட்டுகிறேன்.

எதிர்ப்புகளுக்கு பிறகு, ஒவ்வொரு விஷயத்திலும் அமைச்சர் உதயநிதி கையாளும் விதம் பெருமையாக இருக்கிறது” என்றார்.

Exit mobile version