அரசியல்
பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றார் மோடி! – ராகுல் குற்றச்சாட்டு
பெற்றோல், டீசல் வரி குறைப்பு விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாக ராகுல் காந்தி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
பெற்றோல், டீசல் மீதான ‘வட்’ வரியைக் குறைக்குமாறு, மாநில அரசுகளைப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘ருவிட்டர்’ பக்கத்தில் கருத்துத் தெரிவித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“எரிபொருள் விலை உயர்வுக்கு மாநிலங்கள் மீது பழி போடுகின்றது. நிலக்கரி தட்டுப்பாட்டுக்கும் மாநிலங்கள் மீது பழி போடுகின்றது. ஒட்சிசன் தட்டுப்பாட்டுக்கும் மாநிலங்கள் மீது பழி போடுகின்றது.
எரிபொருள் மீதான வரிகளில், 68 சதவீதத்தை மத்திய அரசுதான் எடுத்துக்கொள்கின்றது. இருப்பினும், பிரதமர் மோடி பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றார். அவரது கூட்டாட்சி தத்துவம், ஒத்துழைப்பானது அல்ல, நெருக்கடி கொடுக்கக்கூடியது” – என்று குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login