செய்திகள்
மைத்திரியை நம்புவதற்கு மக்கள் தயார் இல்லை! – காமினி பதிலடி
” மைத்திரிபால சிறிசேனவின் கதைகளை நம்புவதற்கு நாட்டு மக்கள் தயார் இல்லை. அவரின் ஆட்சி காலத்தில் என்ன நடந்தது என்பது முழு உலகமும் அறியும். அவரை பற்றி கதைப்பதில் அர்த்தம் இல்லை. ” – என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
“அரசியல்வாதிகளை நிராகரித்து, நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட தயாராகிவிட்டனர்.” – என்று மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், நாட்டில் மீண்டும் ஒருமுறை எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது. அவ்வாறு வெளியாகும் தகவல்கள் போலியானவை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
You must be logged in to post a comment Login