செய்திகள்
பஸ் சாரதியின் மூக்கை அறுத்த நபருக்குப் பொலிஸ் வலைவீச்சு!
யாழ்ப்பாணத்தில் தனியார் பஸ்ஸை இடைமறித்த இளைஞர் ஒருவர் சாரதியின் மூக்கைக் கத்தியால் வெட்டி விட்டுத் தப்பியோடியுள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நேற்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த தனியார் பஸ்ஸை நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகில் வழிமறித்த இளைஞர் ஒருவர், சாரதியின் மூக்கைக் கத்தியால் வெட்டி விட்டுத் தப்பியோடியுள்ளார்.
அதையடுத்து அங்கு நின்றவர்கள் சாரதியை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
You must be logged in to post a comment Login