செய்திகள்
ஜனாதிபதி – பங்காளிக் கட்சி அமைச்சர்கள் திடீர் சந்திப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக்கட்சிகளின் அமைச்சர்களுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.
அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
மொட்டு கட்சியை சார்ந்த அமைச்சர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லையென தெரியவருகின்றது.
அரச பங்காளிக்கட்சிகள் இணைந்து நேற்று தேசிய வேலைத்திட்டமொன்றை முன்வைத்துள்ள நிலையிலேயே இந்த அவசர சந்திப்பு இடம்பெறுகின்றது.
You must be logged in to post a comment Login