செய்திகள்
பௌதீக மாணவர் ஆய்வு மாநாடு இன்று!!
யாழ். பல்கலைக்கழக பௌதிகவியல் துறை மாணவர்களின் பௌதிக மாணவர் ஆய்வு மாநாடு இன்று 17 ஆம் திகதி வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசியர் சி. சிறிசற்குணராஜா முதன்மை விருந்தினராகவும், முன்னாள் தகுதிவாய்ந்த அதிகாரியும், வாழ் நாள் பேராசிரியருமான பேராசிரியர் க. கந்தசாமி சிறப்பு விருந்தினராகவும், விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பி. ரவிராஜன் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வு மாநாட்டில் 18 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
You must be logged in to post a comment Login