செய்திகள்
பெரமுனவின் பிரசார கூட்டம் அநுராதபுரத்தில்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் இன்று அநுராதபுரத்தில் நடைபெறுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
அமைச்சர்கள், எம்.பிகள் கட்சி அமைப்பாளர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக முதலாவது கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கான முன்னெடுப்புகள்,கொவிட் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகள். மின்சார நெருக்கடிக்கான தீர்வு உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் மக்களை அறிவூட்ட இருப்பதாகவும் கட்சி தகவல்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பஸில், விரைவாக தேர்தல் நடத்துவதையே பொதுஜன பெரமுன எதிர்பார்க்கிறது , எந்த நிமிடமும் தேர்தல் நடத்துவதையே தானும் விரும்புவதாக குறிப்பிட்ட அவர் கொரோனா தொற்று காரணமாக தேர்தல் செயற்பாடுகள் பின்போடப்பட்டாலும் மீண்டும் அதனை ஆரம்பிக்கும்.
You must be logged in to post a comment Login