செய்திகள்
மாணவர்கள் தாக்குதல்! – பதவியை இராஜினாமா செய்தார் அருந்திக்க
தாம் வகிக்கும் இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அருந்திக்க பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அமைச்சருக்குரிய வாகனம் மற்றும் அதிகாரி ஒருவரும் இச்சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில் அவர் பதவி விலகியுள்ளார்.
அதேவேளை, இராஜாங்க அமைச்சர் பதவியை விலகுமாறு ஜனாதிபதியும் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு பணிப்புரை விடுத்திருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
You must be logged in to post a comment Login