செய்திகள்
மண்ணெண்ணெய் விளக்குகளுக்கு திடீர் கிராக்கி!
ஹற்றன் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக வெளியான தகவலை அடுத்து மண்ணெண்ணெய் விளக்குகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.
மின்வெட்டு அறிவிக்கப்பட்டதையடுத்து ஹற்றனிலுள்ள சில வியாபாரிகள் மண்ணெண்ணெய் விளக்குகளின் விலையை கடுமையாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், நடுத்தர அளவிலான சிம்னி விளக்கு ஒன்றின் விலையை ரூ.1,000 ஆகவும், விளக்கு ஒன்றின் விலையை ரூ.1,200 ஆகவும் உயர்த்த சில வியாபாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த வியாபாரிகள் சிலர் திட்டமிட்டு மக்களை சுரண்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
You must be logged in to post a comment Login