செய்திகள்
கொவிட் தொற்று! – பாடசாலை மனைவி உயிரிழப்பு
நாத்தாண்டிய தம்மிஸ்ஸர தேசிய பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
மாரவில வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (30) மாணவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாத்தாண்டிய தப்போவ பகுதியைச் சேர்ந்த பி. எம். டி. மனிஷா குமாரி பெர்னாண்டோ என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 28ஆம் திகதி பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போதே சிறுமி சுகவீனமடைந்து மாரவில வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login