செய்திகள்
அனுரகுமார மீது தாக்குதல்! – குற்றவாளிகள் அடையாளம் என்கிறார் விஜித ஹேரத்
ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கட்சியினால் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதானாலேயே குண்டர்களால் தாக்கப்பட்டதாக, அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இராணுவப் பயிற்சியின் பாதுகாப்பை விட கட்சித் தோழர்கள் அளிக்கும் பாதுகாப்பு பலமாக இருக்கின்றது.
தமது கட்சி மக்களைப் பாதுகாத்து வருகின்றது. நேற்றைய தாக்குதலின் பின்னணியில் அரசியல் இருப்பதாக தோன்றுகின்றது. இது குறித்த உண்மை நாட்டு மக்களுக்கு தெரியும்.
தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளை ஏற்கனவே அடையாளம் கண்டுவிட்டோம் என அவர் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login