செய்திகள்
முன்னாள் போராளிகள் 16 பேருக்கு பொதுமன்னிப்பு!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 16 விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது
கடந்த 2021 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த 16 விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
பயங்கரவாதச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டின் கீழ் நீண்டகாலமாக நீதிமன்றக் காவலில் உள்ள கைதிகளை விடுதலை செய்வதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதற்கமைய குறித்த 16 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login