செய்திகள்
நீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் மின்வெட்டு! – சமல் ராஜபக்ச
நாட்டில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மின்சாரத்தை வீண் விரயம் செய்யவேண்டாம். தேவையில்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தாமல் அனைவரும் பொறுப்புடன் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும்.
விவசாயத்துக்கு முன்னுரிமை அளித்து மின்சாரம் தயாரிக்க தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது நிலவும் வறட்சியான காலநிலை நீடித்தால் விவசாயம் தவிர வேறு எதற்கும் தண்ணீர் விட முடியாது என்றும் கூறினார்.
நீரைப் பாதுகாப்பது யாழ் பருவ விவசாயத்திற்கு இன்றியமையாதது என அவர் மேலும் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login