செய்திகள்
உருத்திரபுரம் – உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா
வரலாற்று தொன்மையும் சிறப்பம்சமும் கொண்ட கிளிநொச்சி உருத்திரபுரம் – உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி விழா நேற்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 6 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி நேற்று சனிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை எண்ணை காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிலையில், நேற்றையதினம் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த மகா கும்பாபிஷேக பெருவிழாவில் அந்தணர்கள், சமய பெரியார்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
You must be logged in to post a comment Login