செய்திகள்
விவசாயிகளுக்கு நிதியுதவி! – ஜனாதிபதி பணிப்பு
விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குமாறு விவசாய அமைச்சுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
இடைப் போக பயிராக பாசிப்பயறு விளைவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெரும்போக நெல் அறுவடை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் சிறுபோக விதைப்பு ஆரம்பமாகும்.
எனவே நீர்ப்பாசன வசதிகளற்ற இடங்களில் சிறுபோக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாத நிலங்களில் பாசிப்பயறு பயிர்ச்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்செய்கைக்கு தேவையான விதைகளை விவசாயிகள் பெற்றுக்கொள்வது தேவையான நிதி உதவிகளையே விவசாயிகளுக்கு வழங்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login