செய்திகள்
நாட்டுக்கான நல்ல திட்டங்களுக்கு எதிர்க்கட்சி முட்டுக்கட்டை போடக்கூடாது!!
நாட்டின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பின்னடைவை செய்யும் வகையில் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை ஏற்படுத்தக்கூடாது என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற பாராளுமன்ற உரையின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர்,
கடந்த இரண்டு வருட காலமாக நாடிருந் நிலைமையை நாம் அனைவரும் அறிவோம். இதனாலேயே தான் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது முடியாத காரியமாக இருந்தது.
எனினும் தற்போதைய நிலையில் எம்மால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் திட்டங்களுக்கு அமைய எதிர்வரும் மூன்று வருட காலங்கள் நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதாரத்துக்கும் ஏற்ற காலமாக அமையும் என நாம் எதிர்பார்க்கின்றோம் .
எனவே நாட்டின் அபிவிருத்திக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நாட்டின் முன்னேற்றத்தை தடுப்பதற்கான வகையில் எதிர்க்கட்சிகள் செயற்படக்கூடாது.
எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் செய்யும் உரிமை உள்ளது .எனினும் அவர்கள் பின்னடைவை ஏற்படுத்தக் கூடாது என வலியுறுத்தினார்.
You must be logged in to post a comment Login