செய்திகள்
பால் புரைக்கேறி சிசு மரணம்!
சித்தங்கேணியைச் சேர்ந்த 52 நாட்களேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.
கஜா சாயன் என்ற குறித்த சிசு நள்ளிரவு பால் குடித்துவிட்டு நித்திரையோகொண்டுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பார்த்தபொழுது குழந்தையின் மூக்கால் இரத்தம் வந்துள்ளது.
குழந்தை எவ்வித அசைவுமின்றி காணப்பட்டமையால் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே இறந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண விசாரணையை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டதுடன், குழந்தை பால் புரைக்கேறியே இறந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login