செய்திகள்
இளைஞர்களுக்கான டிஜிட்டல் அட்டை அறிமுகம்!!
நாட்டில் இளைஞர்கள் தொழிலொன்றினை இலகுவாக பெறும் நோக்குடன் புதிய டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
15 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 29 வயதிற்கும் குறைந்த அனைத்து இளைஞர்களுக்குசர்வதேச ரீதியிலான பிலோக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த அடையாள அட்டை தயாரிக்கப்பட்டிருப்பதாக தேசிய இளைஞர் மன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதில் இளைஞர்களின் கல்வி மற்றும் தொழில் தகுதி உள்ளிட்ட ஏனைய தகுதிகள் உள்ளிட்ட தரவுகளை கொண்டமைந்த அட்டையாக உருவாக்கப்பட்டுள்ளது.
சேவையாளருக்கு தகுதியான இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்புக்கு தெரிவு செய்வதற்கு இதனூடாக வசதி கிடைக்கின்றது.
உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அடையாள அட்டையை தேசிய இளைஞர் மன்றத்தினூடாக பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login