செய்திகள்
மக்களிடம் மன்னிப்பு கோரினால் பிரச்சனை தீரும்! – எஸ்.பி.திவாரத்ன
நாட்டில் இடம்பெறுகின்ற பிரச்சனைகளுக்காக காரணமாக அமைவது யுத்தத்தால் ஏற்பட்ட விளைவுகளாகும். தமிழ், முஸ்லீம் மக்கள் மிகவும் நல்லவர்கள் எனது 40 வருட கால சேவையினை அவர்களுடன் இணைந்து பயணித்துள்ளேன் என யுத்தம் முடிவடைந்த காலகட்டத்தில் மீள் புனா்வாழ்வு மற்றும் அத்தியாவசிய சேவை ஆணையாளராக இருந்த எஸ்.பி.திவாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்தோன்றி சாட்சியமளிக்கும்போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடா்ந்து சாட்சியமளிக்கையில்,
நாட்டில் இன்று வரை தேசிய மொழிப்பிரச்சனைகள் தீர்கப்படவில்லை தமிழ் பிரதேசங்களில் காணப்படுகின்ற அரச அலுவலக கடிதங்கள் தனிச்சிங்களத்திலேயே அனுப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login