செய்திகள்
தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் நிகழ்வில் யாழ் மேயர் உள்ளிட்டோர் பங்கேற்பு
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இதன்போது சுடர் ஏற்றப்பட்டு குமார் பொன்னம்பலத்தின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
குமார் பொன்னம்பலம் 2000 ஆண்டு ஜனவரி 5ம் திகதி கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login