செய்திகள்
மேலும் இரு இராஜாங்க அமைச்சர்கள் நீக்கம் !
அரசை கடுமையாக விமர்சிக்கும் மேலும் இரு இராஜாங்க அமைச்சர்களையும் பதவி நீக்குவது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது.அவர்களை பதவி நீக்குவதன்மூலம் ஏற்படும் அரசியல் பின்னடைவு நிலை பற்றியும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது. அதன்போது இராஜாங்க அமைச்சு பதவிகளிலும் மாற்றம் வரவுள்ளது. அவ்வேளையில் இவ்விருவரும் நீக்கப்படலாம் என தெரியவருகின்றது.
இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த இன்று நீக்கப்பட்டார். அவர் வகித்த பதவி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு வழங்கப்படவுள்ளது.
You must be logged in to post a comment Login