செய்திகள்
நாட்டில் திரவப்பாலின் விலையும் அதிகரித்தது!
நாட்டில் உள்நாட்டு பால்மா மற்றும் திரவப்பால் ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் நிலையை கருத்தில்கொண்டு குறித்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என தேசிய கால்நடை சபையின் தலைவர் பேராசிரியர் சுமித் மாகமகே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த விலைகள் அதிகரிக்கப்பட்டாலும் இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.
உற்பத்தி மற்றும் பொதியிடல் செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தால் இந்த விலை அதிகரிப்பு தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டிய நிலை உருவாகியுள்ளது – என்றார்.
You must be logged in to post a comment Login