செய்திகள்
பிரிட்டன் விமானங்களுக்கு தடை!
பிரிட்டனில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்திற்கு செல்லும் விமானங்கள் அனைத்துக்கும் மேற்கு வங்க மாநில அரசு தடைவிதித்துள்ளது.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த தடை ஜனவரி 3 ஆம் திகதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று ஆபத்தில்லா நாடுகளில் இருந்து மேற்கு வங்க மாநிலத்திற்கு வரும் அனைத்து பயணிகளும் ஜனவரி 3 ஆம் திகதி முதல் கட்டாயமாக கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
மேலும், பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் மேற்கு வங்க மாநில அரசு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login