செய்திகள்
சீரற்ற காலநிலை! – 14 குடும்பங்கள் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீரற்ற காலநிலையால் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் ரி.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், சேத விபரங்கள் தொடர்பில் குறித்த பிரதேச செயலகத்தினூடாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு கொழும்பு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அனுப்பி வைக்கப்பட உள்ளது எனவும் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login