செய்திகள்
பதில் பிரதமராக பஸில்! – இரட்டை குடியுரிமை தடையாகுமா?
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை பதில் பிரதமராக நியமிப்பது தொடர்பில் அரச தரப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாகவும், சிகிச்சைகளின் பின்னர் சுமார் ஒருமாதம்வரை அவருக்கு கட்டாய ஓய்வு தேவைப்படுவதாலும், பதில் பிரதமர் நியமனம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றுவருகின்றது. இதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஆதரவு தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இரட்டை குடியுரிமை கொண்டவர். எனவே, அவருக்கு பதில் பிரதமர் பதவியை வழங்குவதில் உள்ள சட்டரீதியிலான சிக்கல்கள் குறித்தும், அரசியல் ரீதியில் எழும் எதிர்ப்புகள் பற்றியும் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது.
You must be logged in to post a comment Login