செய்திகள்
மதுவில் பொலிஸ் பணி – அதிரடியாக இடைநீக்கம்!!!
மது போதையில் பொலிஸ் பணியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் அதிரடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றிரவு (30) மதுபோதையில் கடமையில் இருந்துள்ளார்.
இது தொடர்பாக காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு சிறப்பு முறைப்பாடு அளிக்கப்பட்டது.
வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை இன்று (31) முதல் பணியிடை நீக்கம் செய்தார்.
You must be logged in to post a comment Login