செய்திகள்
சட்டவிரோத சங்குகளுடன் சந்தேகநபர் கைது!
இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு புத்தளம் மன்னார் வீதியில் 4 ஆம் கட்டை பகுதி வீடொன்றில் பதிவாகியுள்ளது.
சம்பவ இடத்தில் 487 சங்குகளைக் கொண்ட 3 மூட்டைகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
புத்தளம் தலைமையக பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login