செய்திகள்
இரவோடு இரவாக எகிறியது எரிபொருள் விலை!!!
நாட்டில் எரிபொருள் விலை நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி ஒரு லீற்றர் ஒக்டைன்-92 வகையைச் சேர்ந்த பெற்றோல் 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு லீற்றர் ஒக்டைன் 95 வகையைச் சேர்ந்த பெற்றோல் 184 ரூபாவிலிருந்து 207 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒடோ டீசல் ஒரு லீற்றர் விலை 111 ரூபாவிலிருந்து 121 ரூபாவாகஅதிகரித்துள்ள அதேவேளை, சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 144 ரூபாவிலிருந்து 159 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 77 ரூபாவிலிருந்து 87 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login