செய்திகள்
யோஹானி அடிக்கும் மற்றுமொரு அதிஷ்டம்!!!
இலங்கையை சர்வதேச தளத்திற்கு கொண்டு சென்ற யோஹானி டி சில்வாவை கெளரவிக்கும் வகையில், அவருக்கு காணியொன்று வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளார்.
மெனிக்கே மகே ஹித்தே…” என்ற பாடல் மூலம் இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பெருமை சேர்ந்த இளம் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு, கொழும்பில் காணியொன்றை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி கொழும்பில் முக்கிய நிர்வாக நகராகக் கருதப்படும் பத்தரமுல்ல − ரொபட் குணவர்தன மாவத்தையிலுள்ள, வீதி அபிவிருத்தி அதிகாரச் சபைக்கு உரித்தான 10 பச்சர்ஸ் காணியை அவருக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login