செய்திகள்
கட்டாயமாக்கப்படும் தடுப்பூசி அட்டை…!!
2022 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பு குழுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பொது இடங்களுக்கு செல்லும் போது, கொவிட் தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வதை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login