செய்திகள்
யுகதனவி உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட வேண்டும் – ஜே.வி.பி
அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ‘யுகதனவி’ உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட வேண்டும் – என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்தா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
யுகதனவி உடன்படிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்துக்கோ, அமைச்சரவைக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ எதுவும் தெரியாது. முறைகேடான முறையிலேயே கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அந்த உடன்படிக்கை எமது நாட்டுக்கு பாதகமானது. எனவே, ஒப்பந்தம் இரத்து செய்யப்பட வேண்டும். அவ்வாறு இரத்து செய்ய முடியுமா என சிலர் கேட்கலாம். முடியும் என்பதே பதில். ஏனெனில் மக்களின் அனுமதியின்றி எதனையும் செய்ய முடியாது.
எனவே, அரசு மீளப் பெறவேண்டும். மக்கள் ஆணையை மதித்து செயற்பட வேண்டும். சிலவேளை மேற்படி திட்டத்துக்காக அரசு கப்பம் பெற்றிருக்கக்கூடும். அதனால்தான் பின்வாங்க தயங்குகின்றனர்.”- என்றார்.
You must be logged in to post a comment Login