செய்திகள்
நல்லூரானை தரிசித்த சின்ஷாங் அதிகாரிகள்!!!
வடக்கு மாகாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் அதிகாரிகள் இன்றையதினம் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
காலை 10 மணியளவில் ஆலயத்துக்கு வருகைதந்த சீன தூதுவர் மற்றும் தூதரக அதிகாரிகள் இந்து சமய முறைப்படி வேட்டி அணிந்துவந்தார்.
சீனத் தூதுவரின் வருகையோட்டி நல்லூர் ஆலயச் சூழல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்ததுடன் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login