செய்திகள்
மூக்கை அறுக்கும் நிலைக்கு வரக்கூடாது- அனந்தி
தமிழ்த் தேசிய அரசியலைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து முன்வரவேண்டுமென அனந்தி சசிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை யாழ் நகரை ஒரு அழகிய நகரமாக மாற்றவேண்டுமென்ற ஆவல் எங்களிடம் இருந்தது.
ஆனால் வடமாகாண சபையினால் அது முடியாது போயுள்ளது என்றும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனிப்பட்ட அல்ல அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் காரணமாக சில நல்ல விடயங்களுக்கு வரவேற்புக் கொடுக்காமல் ஒதுக்கி, எதிரிக்கு சகுணப்பிழை என்று மூக்கை அறுக்கும் நிலைக்கு வரக்கூடாது என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login