செய்திகள்
வலி. தென்மேற்கு விவாத அணிக்கு கொழும்பில் பாராட்டு விழா!!
இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ் மொழி மூலமான விவாத போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய வலி. தென்மேற்கு பிரதேச சபை அணிக்கு இன்று கொழும்பில் பாராட்டு விழா நடாத்தப்பட்டது.
கடந்த 19-11-2021 அன்று நடைபெற்ற விவாத போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை வலிகாமம் தென்மேற்கு – மானிப்பாய் பிரதேச சபை பெற்றுக்கொண்டது.
இரண்டாமிடத்தினை மட்டக்களப்பு மண்முனைமேற்கு வவுனதீவு பிரதேசசபையும் மூன்றாமிடத்தினை புதுக்குடியிருப்பு பிரதேசபையும் பெற்றுக்கொண்டது.
முதலாமிடத்தை பெற்றுக்கொண்ட மானிப்பாய் பிரதேசசபையின் விவாதகுழுவில் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் உறுப்பினர்களான அருட்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ, கந்தையா ஜெசிதன் , லோகப்பிரகாசம் ரமணன் , சிவசண்முகநாதன் அனுசன் உள்ளிட்டவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
அணியின் தலைவராக உறுப்பினர் கந்தையா ஜெசிதன் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login