செய்திகள்
வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்தின் தீர்ப்பு ஜனவரியில்!
2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட நியோமல் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் ஆகியோருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வழங்கப்பட உள்ளது.
இவ் அறிவிப்பு கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
2012 வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது சிறை கைதிகளை கொன்றதாக குறித்த நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.
You must be logged in to post a comment Login