செய்திகள்
சுகாதார நடைமுறைகளால் பாடசாலை கொத்தணிகளுக்கு வாய்ப்பில்லை!
சுகாதார நடைமுறைகளை பாடசாலைகளில் ஒழுங்காக பின்பற்றினால் கொத்தணிகள் உருவாக வாய்ப்பில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
நாட்டில் 4 மில்லியன் பாடசாலை மாணவர்களில் சுமார் 400 முதல் 500 பேரே கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைகளில் பாதிப்புக்கு உள்ளாகும் வீதம் குறைவு. இதுவரை பாடசாலை கொத்தணிகள் ஏதும் உருவாகவில்லை.
வீட்டுச் சூழலிலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
You must be logged in to post a comment Login