செய்திகள்
அதிக விலைக்கு சீமெந்து விற்ற இருவர் கைது!!
சீமெந்து பையில் குறிக்கப்பட்டிருந்த விலையை விட அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த போது இரு கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி கலேகான மற்றும் கறுவாத்தோட்டம் பகுதிகளை சேர்ந்த கடை உரிமையாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .
சீமெந்து மூடையின் விலை 1275 ரூபாவா எனவும், கடை உரிமையாளர்கள் சீமெந்து மூட்டை 1400 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாகவும் நுகர்வோர் அலுவல்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login