செய்திகள்
கொரோனா விதிமுறைகளை மீறினாரா கமல்?
கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்த பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து நடிகர் கமலிடம் விளக்கம் கேட்கப்படும்’ என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கொரோனாத் தொற்றிலிருந்து நடிகர் கமல்ஹாசன் குணமடைந்துவிட்டார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இதன்பின்னர், அவர் மருத்துவமனையில் இருந்து நேரடியாக தனியார் தொலைக்காட்சியின் `பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார்.
இதுகுறித்து இன்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
‘கொரோனாவில் இருந்து குணமடைந்த சில நாள்களிலேயே விதிமுறைகளை மீறி பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும்’ என்றார்.
மேலும், ‘மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் அதன்பின் ஏழு நாள்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும்,’ எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login