செய்திகள்
சிலாபத்தில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
நேற்றைய தினம் சிலாபம் – குருநாகல் வீதியின் பிங்கிரிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
58 வயதுடைய குறித்த நபர் பிங்கிரிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
வீதியில் பயணித்த நபர் மீது சிலாபத்தில் இருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த லொறியொன்று மோதியதிலேயே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login